நடிகை நயன்தாரா மொட்டைத் தலையுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக, யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
உண்மையில் நயன்தாரா மொட்டை அடித்தாரா?
வைரலான புகைப்படங்களில் நயன்தாரா திருப்பதி திருமலை கோயிலில் மொட்டைத் தலையுடன் (Nayanthara Bald Look) இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து, படத்தின் வெற்றிக்காக அவர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியதாக சமூக வலைதளங்களில் பலரும் தகவல்களைப் பகிர்ந்தனர்.
ஆனால், இந்த தகவலில் உண்மை இல்லை என தெரியவந்துள்ளது. வைரலான புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என்றும், அவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டவை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பழைய புகைப்படங்களை வைத்து உருவான மோசடி
நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமலைக்கு சென்றிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட உண்மையான புகைப்படங்களில்தான் அவர் தலைமுடியுடன் காணப்படுகிறார். அந்த புகைப்படங்களில் நயன்தாராவின் உடை மற்றும் அணிகலன்களை அப்படியே வைத்துக்கொண்டு, தலைமுடி மட்டும் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘டாக்ஸிக்’ படத்தால் அதிகரித்த எதிர்பார்ப்பு
நயன்தாரா, யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 26-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தில் கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இதனால், படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக நயன்தாராவின் பெயரில் பரவிய இந்த போலி புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. சமூக வலைதளங்களில் வைரலாகும் பிரபலங்களின் புகைப்படங்களை உண்மை என நம்புவதற்கு முன், அதன் நம்பகத்தன்மையை சரிபார்ப்பது அவசியம்.

