Independence day அணிவகுப்பில் சோகம்.. உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம்!

Independence day

Independence day அணிவகுப்புப் பணியின்போது மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

Independence day அணிவகுப்பின்போது திடீர் மயக்கம்

சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படைப் பயிற்சி மையத்தின் இசைக்குழுவில் முதல்நிலைக் காவலராக பணியாற்றியவர் ஏ.தர்மராஜ் (56).

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற அணிவகுப்புப் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த தர்மராஜ், சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தர்மராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு காவல் துறையினர் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

காவலர் தர்மராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஜோசப் விஜய், அவரது குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தர்மராஜின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும் தமிழ்நாடு காவல் துறைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உடன் பணியாற்றிய காவலர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts