கடந்த 2025-ம் ஆண்டு வெளியான கல்யாணி பாடல், (Kalyani Song) ஆரம்பத்திலேயே சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பாடலின் இசை மற்றும் நடனத்துக்கு ஏற்ற தாளம் காரணமாக, ஏராளமானோர் இதனை பயன்படுத்தி ரீல்ஸ் உள்ளிட்ட குறும்பட வீடியோக்களை உருவாக்கினர்.
மலையாள மொழியில் உருவான இந்தப் பாடல், மாநில எல்லைகளை கடந்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் பாடல் பரவலாக பிரபலமடைந்தது.
ஷ்ரேயா கோஷலின் குரலில் புதிய வடிவம்
பாடலுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஷ்ரேயா கோஷல் குரலில் புதிய ரீமிக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது. அசல் பாடலின் தனித்துவத்தை தக்கவைத்துக்கொண்டு, புதிய இசை வடிவத்துடன் இந்தப் பதிப்பு உருவாக்கப்பட்டது. ஷ்ரேயா கோஷலின் குரல் இணைந்த பிறகு பாடலின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களின் வரவேற்பும் மேலும் அதிகரித்தது.
10 கோடி பார்வைகள்
புதிய பதிப்பு வெளியானதைத் தொடர்ந்து, பாடலின் பார்வையாளர்கள் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. தற்போது 100 மில்லியன் பார்வைகள், அதாவது 10 கோடி பார்வைகளை கடந்து ‘கல்யாணி’ பாடல் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஒரு பிராந்திய மொழி ஆல்பம் பாடல் சமூக வலைதளங்கள் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைந்திருப்பது, இந்தப் பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பை வெளிப்படுத்துகிறது.

