தமிழகத்தின் சில மாவட்டங்களில் வரும் ஆகஸ்ட் 18 மற்றும் 19-ம் தேதிகளில் Rain Alert சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 18-ம் தேதி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Rain Alert | ஆக.17-ல் எங்கெல்லாம் மழை?
தமிழக கடலோரப் பகுதிகளில் கீழடுக்கு வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 17-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதர தமிழகப் பகுதிகளில் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆக.18-ல் 2 மாவட்டங்களுக்கு கனமழை
ஆகஸ்ட் 18-ம் தேதி **செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில்** ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
அதேபோல், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழையும், இதர பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஆக.19-ல் மேலும் சில மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
ஆகஸ்ட் 19-ம் தேதி நீலகிரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆகஸ்ட் 17-ம் தேதி வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்சமாக 4 செ.மீ. மழை பதிவு
தமிழகத்தில் காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் **4 செ.மீ. மழை** பதிவாகியுள்ளது.
இளையான்குடி, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், கறம்பக்குடி, நீலகிரி மாவட்டம் வூட் பிரையர் எஸ்டேட், செருமுள்ளி மற்றும் பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

