Vaibhav Suryavanshi | 15 வயதில் மீண்டும் வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

Vaibhav Suryavanshi

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, துலீப் டிராபி தொடரில் புதிய சாதனை படைத்துள்ளார். மத்திய மண்டல அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் கிழக்கு மண்டல அணிக்காக விளையாடிய அவர், 15 வயது 157 நாட்களில் அரைசதம் அடித்து துலீப் டிராபி வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அரைசதம் பதிவு செய்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதன் மூலம் 57 ஆண்டுகளாக நீடித்து வந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

சூர்யவன்ஷி அதிரடி ஆட்டம்

விளம்பரம்:

வைபவ் சூர்யவன்ஷி 81 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். அவரது அதிரடி இன்னிங்ஸில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் இடம்பெற்றன. வெறும் 42 பந்துகளில் அரைசதத்தை எட்டிய அவர், சதத்தை நெருங்கிய நிலையில் ஆட்டமிழந்தார். சதம் அடிக்க இன்னும் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவரது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

1969-ம் ஆண்டு சாதனை முறியடிப்பு

இதற்கு முன்பு 1969-ம் ஆண்டு லக்ஷ்மண் சிங், 16 வயது 23 நாட்களில் துலீப் டிராபியில் அரைசதம் அடித்ததே குறைந்த வயது சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.

விளம்பரம்:

சதத்தை தவறவிட்ட வைபவ்

இந்தப் போட்டியில் சதம் அடித்து மேலும் ஒரு சாதனை படைக்கும் வாய்ப்பு வைபவுக்கு இருந்தது. இருப்பினும் 92 ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த வாய்ப்பை அவர் தவறவிட்டார். துலீப் டிராபியில் இளம் வயதில் சதம் அடித்த வீரர் என்ற சாதனை தற்போது சச்சின் டெண்டுல்கர் வசமே உள்ளது.

15 வயதிலேயே தொடர்ந்து சாதனைகளை உருவாக்கி வரும் வைபவ் சூர்யவன்ஷியின் (Vaibhav Suryavanshi) இந்த அதிரடி ஆட்டம், இந்திய கிரிக்கெட்டில் அவரது வளர்ந்து வரும் திறமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts