விழிஞ்ஞம் சர்வதேச துறைமுகத்தில் முழு அளவிலான வர்த்தகம் தொடக்கம்

Vizhinjam Port

கேரள மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்ஞம் சர்வதேச ஆழ்கடல் துறைமுகத்தில் முழுமையான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தக நடவடிக்கைகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் கலந்து கொண்டு, துறைமுக நுழைவாயிலில் இருந்து சரக்குகளை ஏற்றிச் செல்லும் கண்டெய்னரை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

கேரளாவின் வர்த்தகத்தில் புதிய அத்தியாயம்

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், விழிஞ்ஞம் துறைமுகத்தில் வணிக ரீதியிலான வர்த்தகம் தொடங்கியிருப்பது கேரளாவின் வரலாற்றில் முக்கியமான நிகழ்வு என குறிப்பிட்டார். மேலும், இந்தத் துறைமுகம் சர்வதேச வர்த்தகத்திற்கான புதிய வாயிலாக அமையும் என்றும், இதன் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

‘மிஷன் சமுத்ரா’ மூலம் கடல்சார் வளர்ச்சி

‘மிஷன் சமுத்ரா’ திட்டத்தின் கீழ் கேரளாவின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் சுமார் 600 கி.மீ. நீளமுள்ள கடற்கரைப் பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்தார். இதன் மூலம் கேரளாவை முக்கியமான கடல்சார் வர்த்தக மையமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

உங்கள் கருத்து?

Related Posts