ஷபாலி வர்மாவை அவுட்டாக்கி சைகை செய்த பாகிஸ்தான் கேப்டன் பாத்திமாவுக்கு அபராதம்!
ஐசிசி விதிமுறையை மீறியதாக நடவடிக்கை; 10% ஊதிய அபராதம், 2 தகுதி இழப்பு புள்ளிகள்
துபாய்: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மாவை அவுட்டாக்கியபோது, அவரை பெவிலியனுக்கு செல்லுமாறு கையை நீட்டி சைகை செய்த பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சனா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஷபாலி வர்மா ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து பாத்திமா சனா செய்த அந்த சைகை, ஐசிசி விதிமுறைகளை மீறிய செயலாக கருதப்பட்டது. இதையடுத்து போட்டி நடுவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாத்திமா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10 சதவீத ஊதிய அபராதம்
விதிமீறலுக்காக பாத்திமா சனாவின் போட்டி ஊதியத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் பாத்திமா சனா இரண்டாவது முறையாக விதிமீறலில் ஈடுபட்டிருப்பதால், அவருக்கு 2 தகுதி இழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஷபாலி வர்மாவை ஆட்டமிழக்கச் செய்த பிறகு பாத்திமா சனா செய்த சைகை தொடர்பான விவகாரம் தற்போது மகளிர் ஆசிய கோப்பை தொடரில் கவனம் பெற்றுள்ளது.

