விளம்பரம்:

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க புதிய நடவடிக்கை: முதல்வர் விஜய் அறிவிப்பு !!

Singappen Special Force

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

விளம்பரம்:

தமிழக சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் விஜய் பேசினார். அப்போது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான அரசின் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

குற்றம் நடைபெற்ற பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்றைத் தடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக அவர் கூறினார்.

ரூ.357 கோடியில் நவீன உபகரணங்கள்

விளம்பரம்:

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு 327 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 109 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்தார்.

மேலும், இந்தப் படையின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் ரூ.357 கோடி மதிப்பிலான நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

268 வழக்குகள் பதிவு

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் நடவடிக்கைகள் மூலம் இதுவரை 268 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காணாமல் போன 125 பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்-அமைச்சர் கூறினார்.

குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டன

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக 37,150 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் விஜய் தெரிவித்தார்.

இதன் மூலம் 21 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

போதைப்பொருள் தடுப்பிலும் நடவடிக்கை

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு படைகள் செயல்பட்டு வருவதாகவும், போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காவல் மரணங்களைத் தடுக்க நடவடிக்கை

காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களை முற்றிலும் தவிர்க்கும் வகையில் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என்று விஜய் தெரிவித்தார்.

தவறு செய்தவர் யாராக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காவல்துறையைச் சேர்ந்தவர் என்பதற்காக எந்தவித பாதுகாப்பும் வழங்கப்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts