ராமதாஸ் இல்லத்தில் ‘அரசியல் பேச வேண்டாம்’ என அறிவிப்பு பலகை

Ramadoss

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது 88-வது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், இனி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை என்றும், அரசியல் தொடர்பான விவகாரங்களில் இருந்து விலகி இருக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

தைலாபுரம் இல்லத்தில் புதிய அறிவிப்பு

விளம்பரம்:

இந்நிலையில், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் இல்லத்தின் நுழைவாயிலில் முக்கியமான அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், ராமதாஸை சந்திக்க வருபவர்கள் அரசியல் குறித்து பேச வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சந்திக்க குறிப்பிட்ட நேரம்

அந்த அறிவிப்பில், தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை ராமதாஸை சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை சந்திக்க வருபவர்கள் அரசியல் விவாதங்களை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்:

அரசியல் விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி?

ராமதாஸ் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவரை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களிடம் அரசியல் தொடர்பான பேச்சுகள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல் விஷயங்களை தவிர்த்து, தனிப்பட்ட முறையில் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்து செல்லலாம் என அவரது இல்லம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

விளம்பரம்:

விளம்பரம்:

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts