விளம்பரம்:

அசன் மவுலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை !

Assan Maulana

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. அசன் மவுலானாவுக்கு தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2021-ம் ஆண்டு வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த தேர்தல் செலவுக் கணக்கு தொடர்பான புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.17.03 லட்சம் என கணக்கு தாக்கல்

விளம்பரம்:

2021 சட்டமன்றத் தேர்தலின்போது தனது தேர்தல் செலவு ரூ.17.03 லட்சம் என அசன் மவுலானா கணக்கு சமர்ப்பித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தேர்தல் கண்காணிப்புக் குழுவின் ஆய்வில் உண்மையான செலவு இதைவிட அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

ரூ.32.05 லட்சம் செலவு செய்ததாக ஆய்வில் தகவல்

தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் உள்ளிட்ட செலவுகளை ஆய்வு செய்த அதிகாரிகள், மொத்த செலவு சுமார் ரூ.32.05 லட்சம் எனக் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தேர்தல் செலவினங்களை முழுமையாகவும் முறையாகவும் கணக்கில் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

விளம்பரம்:

தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

தேர்தல் செலவுக் கணக்கை முறையாக தாக்கல் செய்யாதது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளுக்கு எதிரானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அசன் மவுலானா அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் வேட்பாளராக போட்டியிட முடியாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

அசன் மவுலானாவுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. தேர்தல் செலவுக் கணக்குகளை வேட்பாளர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு முறையாக தாக்கல் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இந்த நடவடிக்கை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது

விளம்பரம்:

உங்கள் கருத்து?

Related Posts