வார்டு கவுன்சிலர்களுக்கு மாதம் எவ்வளவு சம்பளம்? முழு விவரம் இதோ!

Ward Councillors

தமிழ்நாட்டின் உள்ளாட்சி நிர்வாகத்தில் வார்டு கவுன்சிலர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். ஒரு பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் முதலில் அணுகுவது பெரும்பாலும் கவுன்சிலர்களைத்தான்.

மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர்களுக்கு முன்பு மாத ஊதியம் வழங்கப்படவில்லை. 2023ஆம் ஆண்டுக்கு முன்பு, மாநகராட்சி மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டங்களில் பங்கேற்பதற்காக மட்டுமே குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க ரூ.800-ம், மண்டல அளவிலான கூட்டத்துக்கு ரூ.50-ம் என மொத்தம் ரூ.850 மட்டுமே கிடைத்தது.

இதையடுத்து, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படுவது போன்று கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு முதல் மாநகராட்சி, நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாத ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.

யாருக்கு எவ்வளவு ஊதியம்?

மாநகராட்சி வார்டு கவுன்சிலர்: மாதம் ரூ.10,000

நகராட்சி கவுன்சிலர்: மாதம் ரூ.5,000

நகராட்சி தலைவர்: மாதம் ரூ.15,000

நகராட்சி துணைத் தலைவர்: மாதம் ரூ.10,000

பஞ்சாயத்து தலைவர்: மாதம் ரூ.10,000

பஞ்சாயத்து துணைத் தலைவர்: மாதம் ரூ.5,000

முன்னதாக, வார்டு தொடர்பான பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு செலவுகளையும் கவுன்சிலர்களே ஏற்க வேண்டிய நிலை இருந்ததாக குறிப்பிடப்படுகிறது. 2023ஆம் ஆண்டு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டதன் மூலம், பதவிக் காலத்தில் அவர்களுக்கு மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படுகிறது

உங்கள் கருத்து?

Related Posts