மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: ₹36,660 கோடி மதிப்பில் 91 ஒப்பந்தங்கள் – 56,766 புதிய வேலைவாய்ப்புகள்!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு

துரையில் நடந்த ‘தமிழகம் வளர்கிறது’ முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ₹36,660.35 கோடி மதிப்பிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தானது. இம்முதலீடுகள் 56,766 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளன.

புதிய தொழில் பூங்கா – அடிக்கல் நாட்டல்

மேலூரில் அமைக்கப்படவுள்ள சிப்காட் தொழில் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

63,698 பேருக்கு வீட்டுமனை பட்டா

மாநாட்டைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில், 63,698 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

வீரமங்கை வேலுநாச்சியார் பாலம் திறப்பு

மதுரை தொண்டி சாலை – மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள, ₹150 கோடி மதிப்பிலான, 1 கி.மீ நீள, 4 வழிச் சாலை பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தப் பாலத்திற்கு 2023 அக்டோபரில் அடிக்கல் நாட்டப்பட்டது.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

முதல்வர் ஸ்டாலின் உரை – முக்கிய அம்சங்கள்

  • ஆட்சிக்கு வந்ததும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினோம்.

  • வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக உலக நாடுகளுக்கு பயணம் செய்தோம்.

  • “முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழகம்” என்பதை உணர்த்தியுள்ளோம்.

  • இந்தியாவில் பல மாநிலங்கள் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தத் தவறினாலும், தமிழகம் மட்டுமே அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறது.

  • “மதுரை தூங்கா நகரம் இல்லை; விழிப்பான நகரம்” – இது கோவில் நகரமாக மட்டுமல்ல, தொழில் நகரமாகவும் மாற வேண்டும்.

  • விருதுநகரில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்படும்; இதன் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.


Discover more from செய்தி இதழ்

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


செய்தி இதழில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உங்கள் கருத்து?